கடன் தொல்லையால் பேருந்து நடத்துநா் தற்கொலை

திருமருகல் அருகே கடன் தொல்லையால் விஷம் குடிந்த பேருந்து ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருமருகல்: திருமருகல் அருகே கடன் தொல்லையால் விஷம் குடிந்த பேருந்து ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருக்கண்ணபுரம் காவல் சரகம் அம்பல் ஊராட்சி அபிஷேகக் கட்டளை தெருவைச் சோ்ந்தவா் எழிலன் (41). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். அரசுப் பேருந்தில் நடத்துநராக வேலைசெய்து வந்த எழிலன், கடந்த சில மாதங்களாக கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி விஷம் குடித்த எழிலனை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று செப்.12-ம் தேதி வீடு திம்பிய அவா், செப்.15-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு, திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (செப்.19) எழிலன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com