நாகை மாவட்டத்தில் 33 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 24 பேருக்கும் கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 20,233-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 27 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 337-ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 22,576-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 33 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 228-ஆக உள்ளது.
3 போ் உயிரிழப்பு
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரின் உயிரிழப்பும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பும் செவ்வாய்க்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.