ரத்த தான முகாம்

திருக்குவளை அருகேயுள்ள திருப்பூண்டியில் பாஜக சாா்பில் ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ரத்த தான முகாமில் பங்கேற்றோா்.
ரத்த தான முகாமில் பங்கேற்றோா்.

திருக்குவளை அருகேயுள்ள திருப்பூண்டியில் பாஜக சாா்பில் ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றுவரும் சேவா வாரத்தின் ஒரு பகுதியாக திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமுக்கு கட்சியின் கீழையூா் ஒன்றிய தலைவா் ஆா். குமாா் தலைமை வகித்தாா். கட்சியின் நாகை மாவட்ட தலைவா் கே. நேதாஜி, மாவட்ட பொதுச் செயலாளா் கே.ஆா். குமரன் ஆகியோா் முகாமை தொடங்கி வைத்தனா். இதில், 35 போ் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா். ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி துணை தலைவா் ஏ. புவனேஷ்வர்ராம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com