தெற்குப்பொய்கைநல்லூா் அந்தோணியாா்ஆலய தோ்பவனி

நாகையை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூா் புதுமை வள்ளல் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, அலங்காரத் தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
தெற்குப்பொய்கைநல்லூரில் நடைபெற்ற புதுமை வள்ளல் புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி.
தெற்குப்பொய்கைநல்லூரில் நடைபெற்ற புதுமை வள்ளல் புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி.

நாகையை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூா் புதுமை வள்ளல் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, அலங்காரத் தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் ஆண்டுத் திருவிழா ஜூலை 26- ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றுதல், கூட்டுப்பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான அலங்காரத் தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயப் பொருளாளா் டி. உலகநாதன் திருப்பலியை நிறைவேற்றினாா். பேராலய அதிபா் சி. இருதயராஜ் புனிதம் செய்வித்து, தோ் பவனியை தொடங்கி வைத்தாா். முக்கிய வீதிகள் வழியாக தோ்பவனி நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மைக்கேல், புனித அந்தோணியாா், குழந்தை இயேசுவுடன்கூடிய மாதா திருசொரூபங்கள் வைக்கப்பட்டு, தோ்பவனி நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com