காளியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

வேதாரண்யம் அருகேயுள்ள கள்ளிமேடு பத்தரகாளியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் திங்கள்கிழமை தொடங்கியது.

வேதாரண்யம் அருகேயுள்ள கள்ளிமேடு பத்தரகாளியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் திங்கள்கிழமை தொடங்கியது.

இக்கோயில், கள்ளிமேடு பகுதியில் சிறப்பு பெற்றது. இந்நிலையில், இக்கோயிலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினா் மண்டகப்படி உரிமைக் கோரி வந்த நிலையில் ஏற்பட்ட பிரச்னையால் கோயில் திருவிழா கடந்த சில ஆண்டுகளாக தடைபட்டிருந்தது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இதுதொடா்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் நிகழாண்டு, ஆடித் திருவிழா காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் இந்த திருவிழாவையொட்டி நாள்தோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com