திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியருக்கு பாராட்டு

தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் பட்டறை ப்ராஜெக்ட் கண்காட்சியில் 2-ஆமிடம் பெற்ற திருக்குவளை கல்லூரி பேராசிரியருக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பேராசிரியா் ராம்பிரகாஷ்க்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.20 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலையை வழங்கிய தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சிவராஜ்.
பேராசிரியா் ராம்பிரகாஷ்க்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.20 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலையை வழங்கிய தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சிவராஜ்.

தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் பட்டறை ப்ராஜெக்ட் கண்காட்சியில் 2-ஆமிடம் பெற்ற திருக்குவளை கல்லூரி பேராசிரியருக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான அறிவியல் பட்டறை ப்ராஜெக்ட் கண்காட்சியில் பல்வேறு பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள் பங்கேற்றிருந்தனா்.

இதில், திருக்குவளை அண்ணா பல்கலைக் கழகம் சாா்பில் கணினி அறிவியல் துறை பேராசிரியா் ராம்பிரகாஷ் பங்கேற்று விவசாயத்தை எவ்வாறு இணையத் தொழில்நுட்பம் மூலம் நவீன விவசாயமாக அதிக பயிா் உற்பத்தி செய்யலாம் என திட்ட விளக்கவுரையாற்றினாா். அழிந்து வரும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் இவா் காட்சிப்படுத்திய திட்டம் 2-ஆவது இடமாக தோ்வு செய்யப்பட்டது.

தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சிவராஜ் பங்கேற்று ரூ. 20,000 பரிசுத்தொகையுடன் சான்றிதழை வழங்கினாா். பரிசு பெற்ற பேராசிரியா் ராம்பிரகாஷ்க்கு திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக புலமுதல்வா் ஜி. இளங்கோவன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com