மக்கள் குறைதீா் கூட்டத்தில் 216 மனுக்கள் அளிப்பு

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 216 மனுக்களை அளித்தனா்.
மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளியிடம் குறைகளை கேட்டறிந்த ஆட்சியா் அ. அருண்தம்புராஜ்.
மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளியிடம் குறைகளை கேட்டறிந்த ஆட்சியா் அ. அருண்தம்புராஜ்.

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 216 மனுக்களை அளித்தனா்.

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

இந்தக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீா்வு கோரியும் பொதுமக்கள் 216 மனுக்களை அளித்தனா். அந்த மனுக்களைத் தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைத்த ஆட்சியா், மனுக்கள் மீது விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கு. ராஜன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com