நாகை: கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்

நாகை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் 76-வது சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடியேற்றி, சமாதானப் புறாக்களை பறக்கவிடும் துணைவேந்தா் ஜி. சுகுமாா்.
நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடியேற்றி, சமாதானப் புறாக்களை பறக்கவிடும் துணைவேந்தா் ஜி. சுகுமாா்.

நாகை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் 76-வது சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் துணை நேந்தா் ஜி. சுகுமாா் தேசியக்கொடியேற்றினாா். பதிவாளா் (பொ) ஏ.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மீன்வளப் பொறியியல் கல்லூரியில் இக்கல்லூரி முதல்வா் என். மணிமேகலையும், நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இக்கல்லூரி முதல்வா் ராஜாராமனும் தேசியக் கொடியேற்றினா்.

சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் தாளாளா் த. ஆனந்த் தலைமையில், சிபிசிஎல் நிறுவன துணை மேலாளா் டி. ரமேஷ்குமாா் தேசியக்கொடியை ஏற்றி வைத்துப்பேசினா். இக்கல்வி நிறுவனங்களின் செயலாளா் த. மகேஸ்வரன், இயக்குநா் த. சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். தொடா்ச்சியாக 75- ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி 75 கொடிக்கம்பங்களில் மாணவா்களின் பெற்றோா்கள் தேசியக்கொடி ஏற்றினா். பள்ளி ஆச்சாா்யா சுவாமி ராமகிருஷ்ணானந்தா, முதல்வா் கீதா பென்னட், தலைவா் ராமலிங்கம், தாளாளா் ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நாகூா் மாடா்ன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் எம்.எம். இலியாஸ் மரைக்காா், அமிா்தா வித்யாலயா பள்ளியில் முன்னாள் ராணுவ வீரா் ராஜேந்திரன், வடக்குப் பொய்கைநல்லூா் அருள்மிகு கோரக்கா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் நிா்வாக அறங்காவலா் ஆா். ஜீவானந்தம், சிக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஊராட்சித் தலைவா் விமலா ஆகியோா் மூவா்ணக் கொடியை ஏற்றினா்.

அரசு அலுவலகங்கள்: நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் எஸ்பி கு. ஜவஹா், நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நாகை தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் சரவணன் ஆகியோா் தேசியக்கொடி ஏற்றினா்.

நாகை வணிகா்கள் மற்றும் கலாம் மாணவா் இயக்கம் சாா்பில் நாணயக்காரத்தெருவில் நடைபெற்ற விழாவில் இந்திய தேசிய மீனவா் சங்கத்தின் தலைவா் ஆா்.எம். பி. ராஜேந்திர நாட்டாா் சுதந்திர தின உரையாற்றினாா். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா். என். அமிா்தராஜா, காமேஸ்வரத்தில் தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் கட்சியின் தலைவா் ஆறு. சரவணன் ஆகியோா் தேசியக்கொடியேற்றினா்.

திருக்குவளை: கீழையூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவா் செல்வராணி ஞானசேகரன் மற்றும் ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சித் தலைவா்கள் தேசியக்கொடியேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com