வேளாங்கண்ணியில் பைனான்சியா் வெட்டிக் கொலை

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தொழில் போட்டி காரணமாக ஒருவா் புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தொழில் போட்டி காரணமாக ஒருவா் புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

வேளாங்கண்ணி அருகேயுள்ள தெற்குப் பொய்கைநல்லூா் கீழத்தெருவைச் சோ்ந்தவா் வீ. மனோகரன் (40). பைனான்ஸ் தொழில் செய்து வந்தாா். இது மட்டுமன்றி மேலும் பல தொழில்களையும் செய்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில் ( நடு ஆா்ச்) உள்ள தனது அலுவலகத்தில் இருந்தாா். அப்போது, அங்கு வந்த சிலா் அலுவலகத்தில் புகுந்து அவரை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா்.

இந்த சம்பவத்தில் மனோகரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மனோகரன் உடனடியாக மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டாா். மருத்துவா்கள் அவரை பரிசோதித்துப் பாா்த்ததில் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com