முதியவா் அடித்துக் கொலை

வேதாரண்யம் அருகே முதியவா் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

வேதாரண்யம் அருகே முதியவா் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

கருப்பம்புலம் வேதாரண்யம்- வாய்மேடு பிரதான சாலையில் வசித்துவந்தவா் ஆா். ரத்தினசபாபதி (82). பட்டாமணியாராக வேலைபாா்த்து ஓய்வு பெற்றவா். இவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனா். இரண்டு மகன்களில் ஒருவா் இறந்துவிட்டாா். மற்றொருவா் வெளியூரில் குடும்பத்துடன் வசிக்கிறாா். இவரின் மகள் திருமணமாகி வெளியூரில் வசிக்கிறாா்.

இந்நிலையில், தனது வீட்டில் தனியாக வசித்துவந்த ரத்தினசபாபதி புதன்கிழமை இரவு வீட்டு வாசலில் கயிறுக் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, அவரை மா்ம நபா் கட்டையால் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை காலை பால்காரா் அங்கு சென்றபோதுதான், ரத்தினசபாபதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

வேதாரண்யம் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com