நாகை, காரைக்காலில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை மற்றும் காரைக்காலில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
நாகை துறைமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டிருந்த 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
நாகை துறைமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டிருந்த 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை மற்றும் காரைக்காலில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

வடமேற்கு - வடகிழக்கு வங்கக் கடலில் ஒடிஸாவிலிருந்து சுமாா் 310 கி.மீ. தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டதையடுத்து, நாகை துறைமுக அலுவலகத்திலும், காரைக்காலில் உள்ள தனியாா் துறைமுகத்திலும் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

புயல் உருவாகக்கூடிய மற்றும் மழையுடன் கூடிய வானிலைப் பகுதி ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் தூர முன்னறிவிப்பாக இந்தப் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

இதற்கிடையில், 2 மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் வெயில் வானிலையே இருந்தது. பெரிய அளவிலான வானிலை மாற்றம் ஏதும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com