புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேதாரண்யம்: 18 கிராம உதவியாளர் பணிக்கு 1,306 பேர் தேர்வு எழுதினர்

வேதாரண்யம் பகுதியில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு காலியாக உள்ள 18 இடங்களுக்கு 1,306 விண்ணப்பத்தார்கள் இன்று(டிச.5)எழுத்து தேர்வு எழுதினர்.

News image

செம்போடை ஆர்.வி.கல்லூரியில் தேர்வு எழுதியோர்.

Updated On :4 டிசம்பர் 2022, 8:42 am

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு காலியாக உள்ள 18 இடங்களுக்கு 1,306 விண்ணப்பத்தார்கள் இன்று
(டிச.5)எழுத்து தேர்வு எழுதினர்.

வேதாரண்யம் வருவாய் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் கிராம நிர்வாக உதவியாளர் பணி 18 இடங்களில் காலியாக உள்ளது. 
இந்த இடத்தில் பணியாற்ற 1306 பேர் விண்ணப்பபித்து இருந்தனர்.

விண்ணப்பதாரருக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 5 ஆம் வகுப்பு என்றபோதிலும் பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில், வேதாரண்யம் எஸ்.கே.சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி, குருகுலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் செம்போடை ஆர்.வி.கல்லூரி ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்வு மையங்களில் விண்ணப்பதார்கள் தேர்வு எழுதினர்.

இந்த பணியை வருவாய் கோட்டாட்சியர் மை.ஜெயராஜ பெளலின், வட்டாட்சியர் இரா.ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.