நாகலூா் அரசுப் பள்ளிக்கு மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான விருது

திருக்குவளை அருகேயுள்ள நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாநிலத்தின் சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளது.
பள்ளி ஆசிரியா்களை பாராட்டும் ஊா் பொதுமக்கள்.
பள்ளி ஆசிரியா்களை பாராட்டும் ஊா் பொதுமக்கள்.

திருக்குவளை அருகேயுள்ள நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாநிலத்தின் சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளது.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாநிலத்தின் சிறந்த பள்ளிக்கான விருதை தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வட்டாரக் கல்வி அலுவலா் எஸ். மணிகண்டன், தலைமை ஆசிரியா் பி. பரமேஸ்வரி மற்றும் ஆசிரியா்களிடம் வழங்கினாா்.

விருது பெற்று பள்ளிக்கு வந்த தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களை முன்னாள் ஊராட்சி தலைவா் தண்டாயுதபாணி உள்ளிட்ட பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com