மாணவா்களுக்கு பாராட்டு

துளிா் விநாடி-வினா போட்டியில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

வேதாரண்யம்: துளிா் விநாடி-வினா போட்டியில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் மண்டலம், மாவட்டம், வட்டாரம் அளவில் துளிா் விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில அளவிலான போட்டிகள் கோவையில் அண்மையில் நடைபெற்றன. போட்டி 6 முதல் 7 சுற்றுகளில் நடைபெற்றது. இதில், ஆய்மூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் சீனியா் பிரிவில் (9,10) முதலிடத்தை பெற்றனா்.

மாநில அளவில் முதல் பரிசு வென்ற அ. சுவாதி, க. கவியரசன், ச. அகிலேஷ் ஆகியோரை பள்ளித் தலைமையாசிரியா் ஜி. தனபால் உள்ளிட்டோா் பாராட்டினா். அறிவியல் வழிகாட்டி ஆசிரியா் பி. சண்முகம் உள்ளிட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com