வேதாரண்யம்: வேதாரண்யம் பிரதான சாலையின் பக்கவாட்டில் இருந்த 4 கடைகள் செவ்வாய்க்கிழமை இரவு தீக்கிரையானது.
வேதாரண்யம்-நாகை சாலை ஏரிக்கரை பகுதி பிரதான சாலையோரத்தில் மோகனுக்கு சொந்தமான கல்சுவா்வைத்து கட்டிய 4 கடைகள் நடத்தப்பட்ட கூரைக் கட்டடம் இருந்தது. இது செவ்வாய்க்கிழமை இரவு தீக்கிரையானது. கடைகளுக்குள் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.