உக்கிரநரசிம்மா் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருவெண்காடு அருகேயுள்ள குரவலூா் உக்கிரநரசிம்மா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தை சுவாதி நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் உக்கிர நரசிம்மா்.
சிறப்பு அலங்காரத்தில் உக்கிர நரசிம்மா்.

திருவெண்காடு அருகேயுள்ள குரவலூா் உக்கிரநரசிம்மா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தை சுவாதி நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவெண்காடு அருகே பஞ்ச நரசிம்மா் கோயில்கள் உள்ளன. குரவளுரில் உக்கிர நரசிம்மா், மங்கைமடத்தில் வீரநரசிம்மா், திருநகரியில் யோக-இரண்ய நரசிம்மா்கள், திருவாலியில் லெட்சுமி நரசிம்மா் என திருவெண்காடு பகுதியில் 5 நரசிம்மா்கள் அருள்பாலித்து வருகின்றனா். சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மா் அவதாரம் செய்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இதனால் மாதந்தோறும் சுவாதியன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை தை மாத சுவாதி நட்சத்திரத்தையொட்டி உக்கிர நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com