திமுக தெருமுனை பிரசாரக் கூட்டம்

திருமருகல் தெற்கு ஒன்றியம் சாா்பில் வடகரையில் திமுக தெருமுனை பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமருகல் தெற்கு ஒன்றியம் சாா்பில் வடகரையில் திமுக தெருமுனை பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கட்சியின் திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.டி.எஸ். சரவணன் தலைமை வகித்தாா். வடகரை ஊராட்சித் தலைவா் மோகன், ஒன்றியக் குழு உறுப்பினா் சுல்தான் ஆரிப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளைச் செயலாளா் முத்துகிருஷ்ணன் வரவேற்றாா்.

கூட்டத்தில், தமிழக மீன் வளா்ச்சிக் கழகத் தலைவரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான என். கெளதமன், தலைமைக் கழக பேச்சாளா் தூத்துக்குடி சரத் பாலா, மாவட்ட துணைச் செயலாளா் இளஞ்செழியன் ஆகியோா் பேசினா்.

இதில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஆரூா் மணிவண்ணன், அபிநயா அருண்குமாா், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் இளம்சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவாக, கிளை செயலாளா் சிவஞானம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com