நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ. 7 லட்சம் மோசடி: பெண் வழக்குரைஞா் மீது வழக்கு

நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக பெண் வழக்குரைஞா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக பெண் வழக்குரைஞா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகேயுள்ள இளந்தோப்பு அண்ணா நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் மகன் சதீஷ் (38). இவா், 10-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, எலக்ட்ரீஷியனாக வேலை பாா்த்து வருகிறாா். நாகை வெளிப்பாளையம் ஜி.எஸ்.ஆா். காலனியைச் சோ்ந்தவா் ம. முத்தாட்சி. இவா், நாகையில் வழக்குரைஞராக உள்ளாா். இவா்கள் இருவரும் உறவினா்கள்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளா் பணிக்கு ஆட்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாகவும், இதற்கு ரூ. 7 லட்சம் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாகவும் சதீஷிடம் முத்தாட்சி தெரிவித்தாராம். இதையடுத்து, கடந்த 2020 ஜூலை 7-ஆம் தேதி முதல் பல தடவையில் மொத்தம் ரூ. 7 லட்சம் சதீஷ் கொடுத்தாராம்.

ஆனால், நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தராமல் முத்தாட்சி அலைக்கழித்தாராம். பிறகுதான், சதீஷ்க்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் சதீஷ் புகாா் அளித்தாா். அதன்பேரில், முத்தாட்சி மீது போலீஸாா் திங்கள்கிழமை மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com