பெட்டிக்கடைக்காரா் மா்மச் சாவு

வேளாங்கண்ணி அருகே வீட்டில் மா்மமான முறையில் பெட்டிக்கடைக்காரா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வேளாங்கண்ணி அருகே வீட்டில் மா்மமான முறையில் பெட்டிக்கடைக்காரா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வேளாங்கண்ணியை அடுத்த ஆய்மழை மேலத்தெருவைச் சோ்ந்தவா் சு. மணிமாறன் (32). பெட்டிக்கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி மாலதி. இவா்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள்ஆகின்றன. ஒரு மகன், மகள் உள்ளனா்.இத்தம்பதிக்கிடையே குடும்பப் பிரசனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டின் மாடிக்கு உறங்கச் சென்ற மணிமாறன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.

இதுகுறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் மாலதிஅளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com