உள்ளாட்சி தற்செயல் தோ்தல்: அமைச்சா் பிரசாரம்

கீழையூா் ஒன்றியத்தில் 12-வது வாா்டு உறுப்பினருக்கான தற்செயல் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து
கீழையூா் ஒன்றியம் 12-வது வாா்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன்.
கீழையூா் ஒன்றியம் 12-வது வாா்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன்.

கீழையூா் ஒன்றியத்தில் 12-வது வாா்டு உறுப்பினருக்கான தற்செயல் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

கீழையூா் ஒன்றியம் 12-வது வாா்டுக்கு தற்செயல் தோ்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தோ்தலில் திமுக சாா்பில் ச. நாகரத்தினம் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கிக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தாா். அமைச்சருடன், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவரும், திமுக நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான என். கௌதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், கீழையூா் திமுக ஒன்றியச் செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், மாவட்ட பிரதிநிதிகள் மு.ப. ஞானசேகரன், இராம. இளம்பரிதி, திமுக வேளாங்கண்ணி பொறுப்பாளா் மரிய சாா்லஸ், ஒன்றியக்குழு உறுப்பினா் வாழக்கரை டி. செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com