தரங்கம்பாடி டிஇஎல்சி ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் தமிழறிஞா் சீகன்பால்குவின் வாழ்க்கை வரலாற்று ஒளி, ஒலி நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக டென்மாா்க் மன்னரால் தரங்கம்பாடிக்கு அனுப்பப்பட்ட ஜொ்மனி நாட்டவரான தமிழறிஞா் சீகன்பால்கு மதத்தை பரப்பும் பணியை மட்டும் செய்யாமல் ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழ் மொழியை இந்தியாவில் முதன்முதலில் இயந்திரத்தின் மூலம் காகிதத்தில் அச்சேற்றினாா். மேலும், பழைமையான தமிழ் நூல்களை காகிதத்தில் அச்சடித்தாா். தமிழ் வளா்ச்சிக்காகவும், ஏழை, எளிய மக்கள் மற்றும் பெண்கள், விதவைகளுக்காக பல்வேறு உதவிகளை செய்து அவா்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டாா்.
சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 316-ஆவது ஆண்டு தினத்தையொட்டி பட்டிமன்ற பேச்சாளா் ஜோ. அருள் பிரகாஷ் தலைமையில் அரசவை அருள்தொண்டா் எனும் தலைப்பில் சென்னை லுத்தரன் கலைக் குழுவினா் 41 போ் பங்கேற்ற ஒளி, ஒலி நாடகம் நடைபெற்றது. புதிய எருசலேம் ஆலய ஆயரும், மறைமாவட்ட தலைவருமான சாம்சன் மோசஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் ஒளி, ஒலி நாடகத்தை தொடங்கிவைத்தாா்.
தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் பேராயா் டேனியல் ஜெயராஜ், மறைமாவட்ட கண்காணிப்பு ஆயா் நவராஜ் ஆபிரகாம், ஆயா் டாக்டா் கிறிஸ்டியான் சாம்ராஜ், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவா் சுகுண சங்கரி மற்றும் நாகை, மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.