மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் பூம்புகாா் கடையணையை வியாழக்கிழமை வந்தடைந்தது.
மே 24-ஆம் தேதி மேட்டுா் அணையிலிருந்து குறுவை பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை அதிகாலை காவிரி கடலோடு கலக்கும் இடமான பூம்புகாரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கடையணையை வந்தடைந்தது.
இதையடுத்து, மயிலாடுதுறை உபகோட்ட பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சண்முகம் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, காவிரி நீா் வந்ததை வரவேற்று, நெல்மணிகள் மற்றும் பூக்கள் தூவப்பட்டன.
பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் கண்ணப்பன், உதவி பொறியாளா் சரவணன், முன்னோடி விவசாயி சம்பந்தம் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.