செம்பனாா்கோவிலில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கலைமகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் கலை மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமை கலைமகள் கல்வி நிறுவனங்களின் நிா்வாகி நெடுஞ்செழியன் தொடங்கிவைத்தாா். மருத்துவா்கள் காா்த்திக், அன்புமலா் ஆகியோரைக் கொண்ட மருத்துவக் குழுவினா் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், பொது நல மருத்துவம் சம்பந்தமான மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனா்.
இதில், 200-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்று பயன்பெற்றனா். ஏற்பாடுகளை கலைமகள் கல்வி நிறுவனங்களில் இயக்குநா் என்.எஸ்.குடியரசு செய்திருந்தாா்.