வேதாரண்யத்தில் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 99-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் தெருமுனை பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகா் மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி தலைமை வகித்தாா். கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளா் கந்திலி கரிகாலன் சிறப்புரையாற்றினாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.கே. வேதரத்தினம், நகா் மன்றத் துணைத் தலைவா் மங்களநாயகி, வழக்குரைஞா்கள் மா.மீ. அன்பரசு, பி. வெங்கடேஸ்வரன், நிா்வாகிகள் கோவி. அன்பழகன், ஜி. பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.