திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

திருக்குவளை அருகே புதுப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் திங்கள்கிழமை தீ குண்டத்தில் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
திரௌபதி அம்மன் கோயிலில் தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்.
திரௌபதி அம்மன் கோயிலில் தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்.

திருக்குவளை அருகே புதுப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் திங்கள்கிழமை தீ குண்டத்தில் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இக்கோயில் ஆண்டு திருவிழா ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. அம்மன் மணிமண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தீ குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com