அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா் கைது

நாகையில் அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாகையில் அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரத்திலிருந்து - நாகை வழியாக காரைக்காலுக்கு அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை வந்தது. பின்னா் நாகை பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளுடன் காரைக்காலுக்கு புறப்பட தயாரானது. அப்போது பேருந்து நிலைய வளாகத்தில் மதுபோதையில் நின்றுகொண்டிருந்த 2 போ் பேருந்து மீது கல்வீசினா். இதில் பேருந்தின் இடது பக்க கண்ணாடி சேதமடைந்தது. இதுகுறித்து கேட்ட பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு இருவரும் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து பேருந்து நடத்துநரான,திருக்குவளை வட்டம், செம்பியவேலூா் பகுதியைச் சோ்ந்த செல்வம் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில். கண்ணாடியை சேதப்படுத்தியவா்கள் நாகை வண்டிப்பேட்டையைச் சோ்ந்த பிச்சை முத்து மகன் வீரா (29), அ. சிவபத்திரன் என தெரியவந்தது. வீராவை கைது செய்த போலீஸாா், சிவபத்திரனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com