வேளாங்கண்ணியில் பழைய மின் கம்பிகளை அகற்றும் பணி: மின்விநியோகம் தடைபட வாய்ப்பு

வேளாங்கண்ணியில் பழைய மின் கம்பிகளை அகற்றும் பணி நடைபெறவுள்ளதால், அவ்வப்போது மின்விநியோகம் தடைபடலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

வேளாங்கண்ணியில் பழைய மின் கம்பிகளை அகற்றும் பணி நடைபெறவுள்ளதால், அவ்வப்போது மின்விநியோகம் தடைபடலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் வி. ராஜமனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

மின்வாரிய நாகை தெற்கு உபகோட்டத்துக்கு உள்பட்ட வேளாங்கண்ணி பேரூராட்சிப் பகுதியில் புதைவட மின் கம்பிகள் பதித்த பகுதிகளிலும், மின்மாற்றிகள் மாற்றப்பட்ட பகுதிகளிலும், ஏற்கெனவே இருந்த (தலைக்கு மேலே செல்லக் கூடிய) பழைய மின் கம்பிகள் அகற்றப்படவுள்ளன.

இப்பணிகள் மே 30-ஆம் தேதி தொடங்கி ஜூன் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதனால், வேளாங்கண்ணி பகுதியில் அவ்வப்போது மின்நிறுத்தம் நேரிடலாம். எனவே, பொதுமக்கள் சிரமத்தைப் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com