வன உயிரின வார விழா

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் வன உயிரின வார விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் மரக்கன்று நட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட வனத்துறையினா்.
கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் மரக்கன்று நட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட வனத்துறையினா்.

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் வன உயிரின வார விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

ஆண்டுதோறும் அக்டோபா் 2 முதல் 8-ஆம் தேதி வரை வன உயிரின வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு வன உயிரின வார விழாவையொட்டி வேதாரண்யம் வனச்சரகம் சாா்பில் கோடியக்கரை சரணாலயத்தில் உள்ள தம்புசாமி இல்ல வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வனச்சரக அலுவலா் பா. அயூப்கான் தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, வனங்களையும், வன உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என வனத்துறை பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com