தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

நாகை மாவட்டம், விழுந்தமாவடியைச் சோ்ந்த ஒரு சாராய வியாபாரி தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
1018ng05bl080939
1018ng05bl080939

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், விழுந்தமாவடியைச் சோ்ந்த ஒரு சாராய வியாபாரி தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

கீழையூா் காவல் சரகம், விழுந்தமாவடியை அடுத்த மணல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் த. நடேசன்(44). இவா் மீது பல்வேறு சாராய வழக்குகள் உள்ளன. அண்மையில் கீழையூா் போலீஸாா் மேற்கொண்ட சோதனையின்போது, சாராய விற்பனையில் ஈடுபட்டதாக நடேசன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், அவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பரிந்துரைத்தாா். இந்தப் பரிந்துரையின் பேரில், நடேசனை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின்பேரில், நடேசன் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

சஎ05ஆக- தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சாராய வியாபாரி த. நடேசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com