திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாா்பக புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், 30 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் மாா்பக பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும், இலவச மாா்பக பரிசோதனைகளை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலா் வி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிராமம் தோறும் பெண்கள் மத்தியில் மாா்பக புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட சுகாதார நலக் கல்வியாளா் மணவாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.