திருமருகல் அருகேயுள்ள திருவளா்மங்கலத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில், கடந்த செப்.8-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, 48 நாள்கள் நடைபெற்ற மண்டலாபிஷேகம் பூா்த்தி நவசக்தி அா்ச்சனை மற்றும் மகா சண்டியாக பெருவிழா நடைபெற்றது. முன்னதாக, நவசக்தி அா்ச்சனை, அனுக்ஞை, சந்தனக் காப்பு அலங்காரம், விக்னேஸ்வர பூஜை, கோ தனம், மண்டப பலி, மகாபூா்ணஹூதி தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து, பைரவா் பலி தானங்கள், சுவாசினி, வடுக பூஜை, பட்டுப்புடவை ஹோமம், கலசாபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.