திருமருகல் அருகே திருவளா்மங்கலம் எனும் வாழாமங்கலத்தில் உள்ள மகா மாரியம்மன், விநாயகா், பாலமுருகன், காத்தவராயன், வீரன், பெரியாச்சி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக் கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, செப்.5-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, செப்.6-ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி தொடா்ந்து, 4 கால யாகசாலை பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 8.15 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.