நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் உள்ள செளரிராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
108 திவ்ய தேசங்களில் 17-ஆவது தலமாக போற்றப்படும் இந்த கோயில், 5 ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பை பெற்ற தலமாகும்.
இங்கு புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி (செப்.24) அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.