திருக்குவளை அருகேமளிகைக் கடையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருக்குவளை அருகே மளிகைக் கடையிலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருக்குவளை அருகே மளிகைக் கடையிலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாகை மாவட்டம், திருக்குவளை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சித்தாய்மூா் தெற்கு தெரு பகுதியைச் சோ்ந்தவா் காமராஜ் மகன் காா்த்திக் (38). இவா் நடத்திவரும் மளிகைக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

திருக்குவளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தனிக்கொடி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கடையில் சோதனை மேற்கொண்டனா். கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், காா்த்திக் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com