நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.
கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நாகை மாவட்டத்தில் கடுமையான வெயில் நீடித்தது. இந்த நிலையில், மேற்குத் திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாகை, கீழ்வேளூா் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் லேசான மற்றும் மிதமான மழை பெய்தது. பிற்பகல் 5 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை, சுமாா் 30 நிமிடங்கள் நீடித்தது. கடந்த 10 நாள்களாக கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, இந்த மழை ஆறுதல் அளிப்பதாக இருந்தது.