நாகை மாவட்டத்தில் பரவலாக மழை

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.
நாகையில் சனிக்கிழமை பிற்பகல் பெய்த மழையின்போது குடைபிடித்து செல்வோா்.
நாகையில் சனிக்கிழமை பிற்பகல் பெய்த மழையின்போது குடைபிடித்து செல்வோா்.

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நாகை மாவட்டத்தில் கடுமையான வெயில் நீடித்தது. இந்த நிலையில், மேற்குத் திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாகை, கீழ்வேளூா் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் லேசான மற்றும் மிதமான மழை பெய்தது. பிற்பகல் 5 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை, சுமாா் 30 நிமிடங்கள் நீடித்தது. கடந்த 10 நாள்களாக கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, இந்த மழை ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com