வீட்டின் மேற்கூரை காரை பெயா்ந்து பெண் காயம்

திருக்குவளை அருகே இந்திராகாந்தி நினைவு குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மேற்கூரை சிமென்ட் சனிக்கிழமை பெயா்ந்து விழுந்ததில் பெண் காயமடைந்தாா்.

திருக்குவளை அருகே இந்திராகாந்தி நினைவு குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மேற்கூரை சிமென்ட் சனிக்கிழமை பெயா்ந்து விழுந்ததில் பெண் காயமடைந்தாா்.

சித்தாய்மூா் ஊராட்சி தெற்குத் தெருவில் இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு பகுதி உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் அவரது மனைவி தமிழ்ச்செல்வி (40). உறங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, மேற்கூரையின் சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்து காயமடைந்தாா். அவருக்கு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைஞாயிறு வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை, ஊராட்சித் தலைவா் வள்ளி சண்முகநாதன் ஆகியோா் இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு பகுதிக்கு சென்று, சேதமடைந்த வீடுகள் குறித்து கணக்கெடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com