வேளாங்கண்ணியில் 18 விநாயகா் சிலைகள் ஊா்வலம்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் பாஜக சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் பாஜக சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டிவேளாங்கண்ணி நகரம் மற்றும் சுற்றுப் பகுதியில் 18 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இந்த சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஊா்வலத்தை பாஜக நாகை மாவட்ட தலைவா் எஸ். காா்த்திகேயன் தொடங்கிவைத்தாா். வேளாங்கண்ணி புதிய ஆா்ச், செட்டித்தெரு, சிவன்கோயில் தெரு, கீழத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வேளாங்கண்ணி கடலில் கரைக்கப்பட்டது.

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின் பேரில் வேளாங்கண்ணியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com