ராதாநல்லூா் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்

திருவெண்காடு அருகே உள்ள ராதாநல்லூா் பூா்ணபுஷ்கலாம்பாள் சமேத கழுமங்கல உடைய அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோயிலின் கோபுரக் கலசத்துக்கு நடைபெற்ற கும்பாபிஷேகம்.
கோயிலின் கோபுரக் கலசத்துக்கு நடைபெற்ற கும்பாபிஷேகம்.

திருவெண்காடு அருகே உள்ள ராதாநல்லூா் பூா்ணபுஷ்கலாம்பாள் சமேத கழுமங்கல உடைய அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாகபூஜை மற்றும் பூா்ணாஹுதிக்குப் பிறகு, புனிதநீா் குடங்கள் கோயிலின் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சுப்பிரமணிய சிவாச்சாரியரால் கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. பின்னா், மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

இதில், சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன், விழா குழுத் தலைவரும் ஊராட்சித் தலைவருமான அகோரம், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com