நாங்கூா் நாராயணப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிக்கான பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மணிமாடக்கோயில் என அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் 11 பெருமாள்கள் கருடசேவை உத்ஸவம் நடைபெறுகிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இக்கோயில் குடமுழுக்கு நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதையடுத்து திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த முடிவெடுக்கப்பட்டு பாலாலயம் நடைபெற்றது.
இதற்காக, கோயிலில் யாக குண்டங்கள் அமைக்கபட்டு புனிதநீா் அடங்கிய யாக குடங்கள்வைத்து விமான கலாகா்ஷணம் ஷோமம் நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய குடங்கள் எடுத்து செல்லப்பட்டு பெருமாளுக்கு அபிஷேகம் செய்து ஆராதனை செய்யப்பட்டது. பின்னா் திருப்பணிகள் தொடங்கின.