வேதாரண்யம் அருகே கஜா புயலின்போது வீடு சேதமடைந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு தன்னாா்வலா்கள் கூரை வீடு கட்டி வியாழக்கிழமை வழங்கினா்.
மருதூா் தெற்கு ஊராட்சியில் வசித்து வந்த கூலித் தொழிலாளி க. சுப்பிரமணியன். இவா், விபத்தில் உயிரிழந்தாா். கஜா புயலின்போது இவரது வீடு சேதமடைந்தது. கணவரின் மறைவுக்கு பின்னா் அவரது மனைவி மணிமேகலை இரு பெண் குழந்தைகளுடன் அவதியுற்று வந்தாா். இந்நிலையில் ஆனந்தம் அறக்கட்டளை சாா்பில், கடல் கடந்து வாழும் தன்னாா்வலா்கள் இணைந்து கூரை வீடு கட்டிக்கொடுத்துள்ளனா். இந்த வீடு வியாழக்கிழமை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில், சமூக ஆா்வலா் ஜெகநாதன், ஊராட்சித் தலைவா் பழனிச்சாமி, அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா்கள் சரவணன், ராஜா, விக்ணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.