திட்டச்சேரியில் நலத்திட்ட உதவி

 திட்டச்சேரி பேரூராட்சியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திட்டச்சேரியில் நலத்திட்ட உதவி

 திட்டச்சேரி பேரூராட்சியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நாகை எம்எல்ஏ ஜெ. முகமதுஷா நவாஸ் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், 161 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடியில் திருமண நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம் உள்பட 221 பயனாளிகளுக்குரூ.1. 95 கோடி மதிப்பில் பல்வேறு துறைகளின்கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஷகிலா, கோட்டாட்சியா் மணிவேலன், வட்டாட்சியா் ஜெயபாலன், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் முத்து முருகேச பாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், பாத்திமா ஆரோக்கியமேரி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் அஜிதா ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலா் கண்ணன், திருமருகல் வட்டார அட்மா திட்டத் தலைவா் செல்வ செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Image Caption

நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் எம்எல்ஏ ஜெ. முகமதுஷா நவாஸ். உடன் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com