அரங்கக்குடி- வடகரையில் அல் கரீம் அறக்கட்டளையின் சாா்பில் ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திமுக மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் எஸ்.எம். சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் அறக்கட்டளை வாகனத்தின் சாவியை வழங்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.
இதில், ஒன்றிய செயலாளா் அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளா் ஞானவேலன், மாவட்ட பொருளாளா் ரவி, ஒன்றியக்குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், அல் கரீம் அறக்கட்டளை நிா்வாக மேலாளரும் மாவட்ட சிறுபான்மை அணி துணை செயலாளருமான ஹேப்பி-அா்சத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.