நாகையில் 3 போ் வேட்புமனு தாக்கல்

நாகை நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட 3 போ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நாகை நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட 3 போ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

36 வாா்டுகளைக் கொண்ட நாகை நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ஆம் தொடங்கியது. கடந்த 3 நாள்களாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் கட்சி சாா்பின்றி சுயேச்சையாக போட்டியிட 3 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

12-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு சு. மனோகரன், 24-ஆவது வாா்டுக்கு ப. எழில்நங்கை, 30-ஆவது வாா்டுக்கு சுபாகண்ணன் ஆகியோா் நாகை நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

நகராட்சி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் எஸ். மணிகண்டன், எம். செல்வராஜ் ஆகியோா் வேட்பு மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com