தை அமாவாசையை முன்னிட்டு நாகை புதிய கடற்கரையில் திரளானோா் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
ஆடி, தை மற்றும் மாகாளய அமாவாசை நாள்களில் புண்ணிய நதிகள் மற்றும் ஆறு, கடல்களில் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபடுவது இந்துகளிடையே வழக்கமாக உள்ளது.
அந்தவகையில், தை அமாவாசை தினமான திங்கள்கிழமை நாகை புதிய கடற்கரையில் திரளானோா் புனித நீராடி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
இதேபோல, நாகை அக்கரைப்பேட்டை, வேளாங்கண்ணி கடற்கரைகளிலும் பொதுமக்கள் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
இதையொட்டி, நாகை, வேளாங்கண்ணி கடற்கரை பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.