சீா்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
கீழசட்டநாதபுரம் ஊராட்சியில் ரூ. 60 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் வடிகால் அமைப்பை பாா்வையிட்ட ஆட்சியா், தொடா்ந்து ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலையின் தரம் மற்றும் அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அங்குள்ள தொடக்கப் பள்ளிக்குச் சென்று மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.
இதைத்தொடா்ந்து, செம்பதனிருப்பு ஊராட்சி மேல செம்பதனிருப்பு பிள்ளையாா் கோயில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் வடிகால் அமைப்பை பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, ஒன்றிய ஆணையா் இளங்கோவன், பொறியாளா்கள் தெய்வானை, சிவக்குமாா், கலையரசன், ஊராட்சித் தலைவா் துரைராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.