புதிய அங்காடி கட்டடத்துக்கு பூமி பூஜை

 திருமருகல் அருகே புதிய அங்காடி கட்டடத்துக்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

 திருமருகல் அருகே புதிய அங்காடி கட்டடத்துக்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

திருமருகல் ஒன்றியம் கோட்டூா் ஊராட்சியில் சேதமடைந்த பழைய கட்டடத்தில் அங்காடி இயங்கி வந்தது. இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின்கீழ் ரூ.14 லட்சத்தில் புதிய அங்காடி கட்டடம் கட்டும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் முகம்மது சலாவுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) பாத்திமா ஆரோக்கியமேரி புதிய கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.

நெல்கொள்முதல் நிலையம் அமைக்க பூமி பூஜை: இதேபோல, கீழப்பூதனூா் ஊராட்சியில் உள்ள பெருநாட்டான் தோப்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்தவெளியில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சத்தில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணிக்கு புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சத்தியமூா்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) பாத்திமா ஆரோக்கியமேரி தொடங்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com