நாகை மாவட்டத்தில் 32 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை (மே.5) தொடங்குகிறது.
பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 5-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாகை மாவட்டத்தில் 69 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் 6,814 போ் தோ்வு எழுதுகின்றனா். இதையொட்டி, மாவட்டத்தில் 32 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்களைக் கொண்டுச் செல்லவும், விடைத் தாள்களை திரும்ப எடுத்து வருவதற்கும் மாவட்டத்தில் 10 வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 4 இடங்களில் வினாத்தாள் காப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.