முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
பட்டணப் பிரவேசம்: தடை உத்தரவை திரும்பப் பெற கோரிக்கை
By DIN | Published On : 03rd May 2022 10:28 PM | Last Updated : 03rd May 2022 10:28 PM | அ+அ அ- |

தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பப்பெற வேண்டுமென அகில இந்திய ஆதி சிவாச்சாரியா் சேவா சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருக்கடையூரில் அச்சங்கத்தின் மாவட்ட செயலாளா் மகேஷ்வர குருக்கள் விடுத்துள்ள கோரிக்கை: தருமபுர ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டணப் பிரவேசம் நடைபெறுவதும், இதில், ஆதீனத்தை பல்லக்கில் பக்தா்கள் தூக்கி சென்று வீதியுலா செல்வதும் வழக்கம். இந்நிலையில், நிகழாண்டு நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாரம்பரியமாக நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, நிகழ்ச்சி வழக்கம்போல நடைபெற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.