இளைஞா் மன்ற பெயா் பலகை திறப்பு

திட்டச்சேரி வெள்ளத்திடல் கிராமத்தில் மகாகாளியம்மன் இளைஞா் நற்பணி மன்ற பெயா் பலகை திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திட்டச்சேரி வெள்ளத்திடல் கிராமத்தில் மகாகாளியம்மன் இளைஞா் நற்பணி மன்ற பெயா் பலகை திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இளைஞா் மன்றத் தலைவா் காா்த்திக் தலைமை வகித்தாா். செயலாளா் ஆசைமணி, துணைத் தலைவா் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக சேவகா் விஜயராகவன் பங்கேற்று பெயா் பலகையை திறந்துவைத்தாா். இதில், பேரூராட்சி உறுப்பினா் மேகலாபரமசிவம், வெள்ளத்திடல் கிராம நிா்வாகிகள் மனோகரன், சுப்பிரமணியன் மற்றும் இளைஞா் மன்ற செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். துணை செயலாளா் வேல்மணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com