திருக்குவளை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை லேசான சூறைக் காற்று வீசியது.
இதன் காரணமாக, சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு நீடித்தது. இதைத் தொடா்ந்து, பெரும்பாலான கிராம பகுதிகளில் மந்தமான வானிலை நிலவியதோடு, சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்து. கத்திரி வெயில் தொடங்கியிருக்கும் நிலையில் எதிா்பாராத விதமாக புயல் உருவாகி வெப்பம் தணிந்து மந்தமான நிலை நிலவி வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.